புதன், 25 ஜூலை, 2018

செவ்வாய், 10 ஜூலை, 2018

சு டோ கு

இது ஒரு புதிய கரு.

நீங்க எழுத வேண்டிய கதையின் கரு:
சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண்.



(ஹி ஹி ! இது சுந்தரியின் அம்மா)

அதே போல, குணபதி அவனுடைய அம்மா அப்பாவுக்கு ஒரே பையன். மீதி காரெக்டர்கள் (தாத்தா, பாட்டி etc) அவர்கள் பெயர்கள் எல்லாம் உங்கள் கற்பனைக்கு.


              (குணபதியின் அம்மா, அப்பா)

கதைக் கரு என்ன என்றால், சுந்தரிக்கும், குணபதிக்கும் திருமண முயற்சி. பெண் பார்த்தல், சொஜ்ஜி, பஜ்ஜி சமாச்சாரம் எல்லாம் இல்லாமல், இரு வீட்டாரும் வேறு ஒரு முடிவு எடுக்கிறார்கள்.

ஒரு வாரம், சுந்தரி, குணபதியின் வீட்டிலும், அதே வாரத்தில், ( சு To கு வாரத்தில்) குணபதி, சுந்தரியின் வீட்டிலும் தங்கி அந்தந்த  வீட்டில் ஒரு அங்கத்தினராக இருந்து, தங்கள் வேலைகளைப் பார்ப்பது.

இருவீட்டாரின் பெரும்பான்மை அபிப்பிராயம்  ஓ கே என்றால், (அதாவது, தன் மகன் / மகளுக்கு ஏற்ற ஜோடி இவள் / இவன்தான் என்ற கருத்து ஒற்றுமை) ஏற்பட்டால் திருமணம் நடக்கும். இல்லையேல் வேண்டாம் என்று முடிவு எடுக்கப்படும்.



சுந்தரிக்கும், குணபதிக்கும் கல்யாணமா, இல்லையா? கதையும் முடிவும் உங்கள் கைகளில்!


சிறுகதையோ, குறுந்தொடரோ என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்.

Start music !