வெள்ளி, 13 ஜனவரி, 2012

165 ஆவது தியாகராஜ ஆராதனை.

165 ஆவது தியாகராஜ ஆராதனை விழா.

நாள்: January 13 - 2012.

நிகழ்ச்சி: பஞ்சரத்ன கிருதிகள்.

கீழே எம் பி 3 கோப்பாக. கேட்டு இரசியுங்கள்.



டவுன்லோட் லிங்க் : இங்கே சொடுக்குக!

     

சனி, 7 ஜனவரி, 2012

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா ...

                              
இசை அனுபவம் - எழுதியவர் குரோம்பேட்டைக் குறும்பன். 

ஆசிரியர்களே! 
'சவடால் கதைப் போட்டி'யில் எனக்கு டெப்பாசிட் கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. 

இதோ ஒரு புதுவகை இசை விமரிசனம். விமரிசனம் கூட அல்ல - இது ஒரு அனுபவம். 

படியுங்க; பிருந்தாவன சாரங்கா பாட்டு - நெட்டிலே எங்காவது கிடைத்தால் எடுத்துப் போடுங்க - அல்லது சுட்டி கொடுங்க. 

முன்னறிவிப்பு: இது ஒரு இனிய கற்பனை. 

********************************************************************
அஸ்தினாபுரம். 
பாண்டவர்களைக் காண வந்தான் கண்ணன். பாண்டவர்கள் வாய் நிறைய வரவேற்றனர். 

பிறகு அர்ஜுனன் கேட்டான், "எங்கே கண்ணா இந்தப் பக்கம்?"

கண்ணன்: "நான் எப்பவுமே உங்க பக்கம்தானே!"

தருமர்: "அது சரி! நாங்களும் எப்பவும் உன் பக்கமே!"

கண்ணன்: " எல்லோருக்கும் அவரவர்கள் சிறு வயதில் வாழ்ந்த, விளையாடிய இடத்தைக் காணவேண்டும் என்று பெரிய வயதில் ஆசை இருக்கும். எனக்கும் இப்பொழுது நான் சிறு வயது சேட்டைகள் செய்த பிருந்தாவனத்தைக் காணவேண்டும் என்று ஆசையாக உள்ளது."

பாண்டவர்கள்: "ஆமாம் - உன் பிருந்தாவனக் கதைகளைக் கேட்கும்பொழுதெல்லாம் எங்களுக்கும் அந்த இடங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததுண்டு. தேரில்தானே வந்திருக்கின்றாய் கண்ணா? நாம் அனைவரும் அங்கே செல்வோம்."

கண்ணனும் பாண்டவரும் தேரேறி மகிழ்ச்சியாக பிருந்தாவனம் செல்கின்றனர். 
***********************************************************************

பிருந்தாவனம் சென்றடைந்தவுடன், கண்ணன், "ஆஹா ஆஹா - சிறு வயது நினைவுகள் இங்கு ஒவ்வொரு இடத்தைப் பார்க்கையிலும் நினைவுக்கு வந்து மயங்க வைக்கின்றதே!"

அர்ஜுனன்: "கண்ணா உன் சிறு வயது விளையாட்டுகளை மீண்டும் ஒரு முறை எங்களுக்கு கூறு. எந்த இடத்தில் என்னென்ன லீலைகள் புரிந்தாய் என்பதை எங்களுக்குச் சொல்லு."

கண்ணன், பாண்டவர்களுக்கு பிருந்தாவனத்தைச் சுற்றி காட்டியபடி, பல சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றான். 

பிறகு, பாண்டவர்களிடம், "நான் இங்கே ஒளிந்து கொள்கின்றேன்; என்னை நீங்கள் ஐவரும் கண்டு பிடிக்க முடியுமா?" என்று கேட்டான். 
பாண்டவர்களும் சரி என்று இசைந்தனர். 

பாண்டவர்கள் ஐவரும், அங்கு இருந்த ஒரு மேடை மீது அமர்ந்து கண்களை மூடிய வண்ணம், கண்ணன் ஒளிந்துகொள்ள சற்று அவகாசம் அளித்தனர். கண்ணன் சென்று ஒளிந்துகொண்டான். 

*************************************************************************
இதோ மேடை மீது பஞ்ச பாண்டவர்கள்: 


தர்மராக கத்ரி கோபால்நாத்(சாக்ஸஃபோன்) பீமராக பெங்களூர் ராஜசேகர் (முகர்சிங்) நகுலனாக பட்ரி சதீஷ்குமார் (மிருதங்கம்) சகாதேவனாக ராஜேந்திர நகோத் (தபலா) எல்லாவற்றுக்கும் மேலே, வில் வீரனான அர்ஜுனனுக்கு நிகர் - வில்லேந்தும் வீராங்கனை கன்னியாகுமரி (வயலின்). 

தேடல் ஆரம்பமாயிற்று. 
   
தர்மர் தேட ஆரம்பிக்கின்றார். பின்னாலேயே அர்ஜுனன் வில்லுடன் வழி தொடர, பீம, நகுல சகாதேவர்கள் பின் தொடர, கண்ணனைத் தேடுகின்றார்கள். 

தர்மர்: "அதோ அந்தக் காக்கைச் சிறகினில் இருப்பானோ?"

அர்ஜுனன்: "ஆம் அண்ணா. எனக்கும் அதே சந்தேகம்தான்!"

மற்றவர்கள்: "ஊஹூம் - இங்கே இல்லை கண்ணன்."

தர்மர்: " அப்போ அந்த மூங்கில் காட்டில்? புல்லாங்குழல் சத்தம் கேட்கிறதே - அங்கு இருப்பானோ?"

அர்ஜுனன்: "ஆமாம். அதுவும் சாத்தியமே!"

மற்றவர்கள்: "நாம் வந்தவுடன் புல்லாங்குழல் சத்தம் நின்றுவிட்டதே!"

தர்மர்: "அந்தப் பூ?"

இல்லை.

தர்மர்: "அந்த மயிலிறகில்?"

ஊஹூம் - மயிலிறகு மௌனப் புன்னகை புரிகின்றதே!

தர்மர்: "அந்தக் கருமேகக் கூட்டம் அவன்தானோ?"

மற்றவர்கள்: "கருமேகங்கள் கான மழையாகப் பொழிகின்றனவே - இங்கேயும் கண்ணனைக் காணோமே!"

தர்மர்: "அந்த வானவில்லாக இருக்கின்றானோ?"

அர்ஜுனன்: "வானவில் வந்தது போலவே மறைந்துவிட்டதே! கண்ணன் அதில் மறைந்திருக்க முடியாது."

தர்மர்: "இந்த மலை வடிவாகி நிற்கின்றானோ - அந்த மலையப்பன்?"

மற்றவர்கள்: "இல்லை - இந்த மலை எப்பொழுதுமே இங்குதான் இருக்கின்றது. பழைய தோற்றம்தான்."

தர்மர்: "இந்த இனிய தென்றல்தான் அவனோ?"

மற்றவர்கள்: "இருக்காது. இந்தத் தென்றல் நம்மைத் தீண்டிய பிறகு நம்மோடு நிற்காமல் சென்று விட்டதே! நம் கண்ணனாக இருந்தால், நம்மை விட்டு நீங்க மாட்டானே!"

தர்மர்: "அப்போ கண்ணன் எங்கே? கண்ணா நீ எங்கே இருக்கின்றாய்?"

எல்லோரும் சேர்ந்து: : "கண்ணா - எங்கே இருக்கின்றாய் நீ?"

புன்னகை தவழும் முகத்துடன், அவர்கள் எதிரில் பிரத்யட்சமாகின்றான் கண்ணன்.

பாண்டவர்கள்: "கண்ணா எங்கே மறைந்திருந்தாய் நீ? எங்களால் உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையே!"

கண்ணன் கூறினான்: "நான் உங்களுடனேயே இருந்தேன். நீங்கள் ஐவரும் இசைத்த பிருந்தாவன சாரங்கா ராகமாக - அந்த ராகத்தின் எழில் வடிவமாக, அந்த ஸ்வரக் கோர்வைகளை சுவாசித்தவண்ணம், தாளக் கட்டுகளாக இதயம் துடிக்க, ஆரோகண அவரோகண அலைகளின் ஆர்ப்பரிப்புகளை இரசித்தவண்ணம். உங்கள் தேடல்களுக்குள்ளேயே நான் மறைந்து நின்றதால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை."

                

வெள்ளி, 6 ஜனவரி, 2012

வாக்காளப் பெருமக்களுக்கு .... கீதா சாம்பசிவம் வேண்டுகோள்!


               
//கீதா சாம்பசிவம் மேடம் - கான்வாசிங் உண்டு. நீங்க உங்கள் தரப்பு வாதங்களை, உங்களுக்கு வோட்டுப் போட்டால் வாக்காளப் பெருமக்களுக்கு என்ன இலவசம் கொடுப்பீர்கள் என்று எழுதி engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். ஜனவரி பதினான்காம் தேதி வரை வாக்குப் பதிவு இருக்கின்றது. ஒரு கை பார்த்துவிடலாம்!//


//ஒரு ஓட்டுக்கு ஒரு ஆடு, ஒரு ரெப்ரெஜிரேடர், ஏசி கார் இலவசம். இன்னும் நிறைய இலவசத் திட்டங்கள் வருகின்றன. சைனாவில் ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டியிருப்பதால் தாமதமாகிறது. அதற்காக ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டாம். அப்பாதுரை. //

ஹாஹா, மேலே இருப்பது எங்கள் ப்ளாக் எனக்குக் கான்வாசிங்குக்குக் கொடுத்த அனுமதி.  என்னடா தானைத் தலைவியா இருந்துட்டு அனுமதி எல்லாம் கேட்கறேன்னு பார்க்கறீங்களா?  தேர்தல்னு வந்தால் எலக்‌ஷன் கமிஷனின் உத்தரவுகளை மதிக்கணுமே!  அதான்!  எலக்‌ஷன் கோட் அறிவிச்சுட்டாங்க.  அதற்கு உட்பட்டு நானும் சில, பல பதிவுகளில் போய்க் கான்வாசிங் செய்திருக்கேன்.  மிச்சத்துக்குத் தேடிக் கண்டு பிடிச்சுட்டுப் போகணும். ஹிஹி, ஆனால் கான்வாசிங் செய்யாமலேயே கீதா சந்தானத்திற்கு மதிப்பெண்கள், சே,சே, வாக்குகள் கூடுதலாய் இருக்கிறதைப் பார்த்து கண், காது, மூக்கு, வாய்னு எல்லாத்திலேயும் புகை வந்துட்டு இருக்கு.  (இங்கே மெம்பிஸில் உறைநிலைக்குப் போயிடுது ராத்திரி எல்லாம், வாயைத் திறந்தால் புகை வராமல் என்ன பண்ணும்?) சரி, சரி, இலவசம் அறிவிக்கச் சொல்லித் தேர்தல் கமிஷனே உத்தரவு கொடுத்து அதையும் எழுத்து வடிவத்தில் (ஒரு ஜாக்கிரதைக்குத் தான்) வாங்கி வச்சுட்டிருக்கிறதாலே நான் எனக்கு ஓட்டுப் போடறவங்களுக்கு என்னவெல்லாம் கொடுப்பேன் என்பதை இங்கே அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாருங்க அது, உங்களுக்கு வாங்கித்தான் பழக்கம்னு முணுமுணுக்கிறது?  வாங்கினதை பத்திரமா வச்சுப்போம் இல்ல? அதைப் பாருங்க! வழக்கமா நான் முப்பெரும் விழா நடத்தறச்சே தொண்டர்கள் தான் எடைக்கு எடை தங்கம், வெள்ளி, வைரம்னு கொடுப்பாங்க. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ணறது? நேரம், ஏழரைச் சனி இப்போ எனக்கு. கையை விட்டுச் செலவு பண்ண வேண்டி இருக்கு .  இதோ பட்டியல் தயார்.


லேட்டஸ்ட் இன்டெல் கோர் லாப்டாப்


காரிலே வைச்சுட்டுப் போற சகலவசதிகளோடு கூடிய பிசி.



அன்ட்ராய்ட் போன்
  
 ஆப்பிள் ஃபோன்

  

ஐ ஃபோன் 5ஜி
  
  ஐ பாட்

  

நோட் புக்

எல்லாத்தையும் பார்த்துக்குங்க.   பார்த்துட்டு எங்கள் ப்ளாக் சைடு பாரில் உள்ள வாக்குச் சாவடியில், உங்கள் ஓட்டை எனக்கே போடுங்க!  எனக்கே எனக்கு. 
      
கீதா சாம்பசிவம்.