திங்கள், 2 அக்டோபர், 2017

க க க போ 4 : நெல்லைத்தமிழன் ரெசிப்பி ! ஆரம்பம் சொல்வோம் மீதி என்ன?


அன்புடன்

"நெல்லைத்தமிழன்"


கீழே உள்ளதுதான் கதையின் ஆரம்பம். ‘வாசு, வானதி, சுவாமினாதன், வசுமதி’ என்ற பெயரை வேண்டுமானால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். உறவு நீங்கள் விரும்பியபடி. ‘மொழி நடையையும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் (உதாரணம்: ஐயா  போதும் நீங்க ஏன் இங்கன தனியா இருக்கீக. எம்மடகூட வந்துருங்க  போன்று). ஆனால் ஆரம்பம் அப்படியே இருக்கவேண்டும். உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு கதை எழுதி அனுப்புங்கள்.

கடமை

‘அப்பா.. போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது.. எங்களோட வந்துடுங்க.’  வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்.

‘வேணாம்டா.  இங்கயே இருந்துட்டேன். இங்கயே போயிடறேன்டா. வானதியோட எப்போவும் தொடர்புல இருடா. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்’, சுவாமினாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கண்ணைமூடினார்.

வாசுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது. கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக்கொண்டான். வசுமதி அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்..


இனி நீங்கள் எழுதுவது......