வெள்ளி, 23 ஜூன், 2017

நினைவலைகள்! க க க போ 2.


இது இரண்டாம் கரு. 
=====================

ஒரு பூங்கா . 

அதில் உள்ள ஒரு இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள்! 

தனியான, அழகிய இளம்பெண் !

அவளுடைய நினைவலைகள்தான் கதை. 

 

(ஹி ஹி சும்மா கையில் கிடைத்த படத்தைப் போட்டிருக்கேன். அதனால தமிழ்ப் பெண் இல்லை என்றெல்லாம் நெனச்சுக்காதீங்க!  ஏன் என்றால் தமிழில் அல்லவா அவளுடைய நினைவலைகள் இருக்கின்றன. மேலும் பி சுசீலாவின் பாடல் வரிகள் வேறு மிக்ஸ் ஆகவேண்டும். நெல்லைத் தமிழன் ஜெயராஜ் வரைந்த படம் போடவேண்டும் etc etc )

ஆனால் ... கதையின் கடைசி வரிகள்: 


அப்பொழுது எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்தது அந்த  இனிமையான பாடல்!  பாடலைப் பாடிய பி சுசீலா, அவளுக்காகவே அந்த வரிகளைப் பாடியது போலிருந்தது!  


-------------------------
யார் அவள்? என்ன நினைவலைகள்? என்ன பாடல்? எல்லாம் உங்கள் கற்பனைக்கு. 

நடத்துங்கள் யாகத்தை! 
------------------------------


42 கருத்துகள்:

  1. இதோ, தலையில் தூக்கி வைத்துவிட்டேன் கரகத்தை...!! அடுத்து வரும் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் :) :)

    அதாவது நான் கதை எழுதப் போறேன் :)

    பதிலளிநீக்கு
  2. "ஹி ஹி சும்மா கையில் கிடைத்த படத்தைப் போட்டிருக்கேன்" -- நம்பிட்டோம்.. எழுதினவர்ட்ட இருக்கற படக் கலெக்ஷனைப் பார்த்தீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நெல்லைத்த தமிழன் கிட்ட ஒரு படத்தை வரைந்து வாங்கி அதற்கு கதை கேட்டிருக்கலாமே!" என்று சொல்கிறார் நுங்கம்பாக்கம் நூர்முகமது!

      நீக்கு
    2. ஹி ஹி அப்போ கலெக்‌ஷன்ல இருக்கற க. படங்களை எப்போ போடுவது!

      நீக்கு
    3. // நம்பிட்டோம்.. எழுதினவர்ட்ட இருக்கற படக் கலெக்ஷனைப் பார்த்தீங்களா?//

      ஹா ஹா ஹா கங்கரைக் கரைக்கோட்டம்:) கலகலப்பா கிளுகிளுப்பா இருப்பதைப் பார்த்து பாலைவனத்தில புகைப்போகுதே:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

      நீக்கு
    4. ///க. படங்களை ///

      அஞ்சூஊஊஊஊஊஊஉ டிக்‌ஷனறி எடுத்துக்கிட்டு வாண்டோ வாண்டோ:)

      நீக்கு
    5. கர்ர்ர்ர் தெளிவா சொல்லணும் இப்போ ஜெர்மன் .பிரென்ச் ஸ்பானிஷ் போலிஷ் எல்லா டிக்ஷ்னரியும் தூக்கிட்டு வந்துட்டேன்

      நீக்கு
    6. கௌ அண்ணன் பாவம்பா அவர் நெல்லைகிட்ட நல்ல படம் ஒண்ணு அதான்.. அதிரா..... ஜெயராஜ் ரேஞ்சுல எதிர்ப்பார்க்கிறார்....அது கிடைக்கல போல அதான் வேற வழியில்லாம தன் கலெக்ஷன் போட்டுருக்காரு...நெல்லை கௌ அண்ணனுக்கு உதவலாமே!!! ஹிஹிஹீ

      கீதா

      நீக்கு
  3. பொதுவாக பெண்களின் மனது ஆழம் என்பார்கள். ஆனால் நான் அதை நம்புவதே இல்லை..! நான் பழகியவரை அப்படி ஆழமான மனதைச் சந்திக்கவில்லை. :) :)

    அது ஒரு பக்கம் இருக்கட்டும்..!

    இதில் ஒரு பெண் மனதில் என்னவெல்லாம் நினைக்கிறா என்பதைக் கண்டு பிடித்து, யூகித்து எழுதோணும். பரவாயில்லை என்னுடைய அங்கிள் ஒராள் 'ஸ்கொட்லாண்ட் யார்ட்' பொலீசில் வேலை செய்கிறார். அவரிட்ட ஹெல்ப் கேட்டு கதையை எழுதுகிறேன் :) :)

    பதிலளிநீக்கு
  4. இம்முறை கககபோவின் கரு ரொம்ப சூப்பர். ஐ லைக் இட் :)

    அப்புறம் கண்டிப்பா சுசீலா தானா? எனக்காக ஒரு விதியை தளர்த்த மாட்டிகளா?

    எஸ்.ஜானகியோட செம பாட்டு ஒன்று ரெடியா வைச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராரா... பி சுசீலா பாடல்களில் என்ன குறை!

      //நான் பழகியவரை அப்படி ஆழமான மனதைச் சந்திக்கவில்லை. :) :) //

      அப்படியானால் நீங்கள் ஆழத்தின் அளவையே அறியவில்லை!!!!!!

      நீக்கு
    2. அதானே சுசீலா பாடல்களில் என்ன குறை? அதையே போடுறன் :) :)

      - ஆழத்தின் அளவு - // அதாவது ஶ்ரீராம், அப்படி ஆழம் இருக்கிறமாதிரி நான் பீல் பண்ணல என்று சொல்ல வந்தேன் :) :)

      ஒருவேளை எனக்குத் தெரியாமலேயே ஆழமா இருக்குமோ?

      இப்ப நல்ல Topic கிடைச்சாச்சு. ஏன் இதையே ஒரு பதிவாக நீங்கள் போடக்கூடாது.? :)

      நீக்கு
    3. ரா ரா உங்களுக்கு ராஜாவின், "பெண் மனசு ஆழமென்று" பாடலை டெடிகேட் பண்றேன். கேளுங்கள். பொதுவாக சுசிலா பாடல்களை கண்ணதாசன் கவிதைகளுக்கு ஒப்பிடலாம்னா, எஸ் ஜானகி அவர்கள் பாடல்களை வாலியின் கவிதைகளுக்கு ஒப்பிடலாம்.

      நீக்கு
    4. ஸ்ரீராம் ராரா ரொம்பச் சின்னப் பையனோ!!!?? இன்னும் பெண்களின் மனதில் குதிக்கவில்லை போலும் அதான் ஆழம் தெரியலை ஹஹஹஹ்..

      கீதா.

      நீக்கு
  5. எழுத்தின் அளவை சிறிது அதிகப்படுத்தினால், ஒரு (தொழிற்நுட்ப) கதை ரெடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையும் நீங்கள்தான் செய்யவேண்டி இருக்கும் டிடி!

      நீக்கு
  6. எந்த தலைப்பைக் கொடுத்தாலும் கதை எழுத பதிவர்கள் ரெடியாக இருக்கிறார்களா ? என்ற சோதனையா?
    நினைவலைகளில் பிறக்கும் கதைகள் அருமையாக இருக்கும் பி.சுசிலாவின் பாட்டு வேறு ! கேட்க வேண்டுமா?
    படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நேரமோ அதிகாலை 4 மணி... கே கே எஸ் வீதியால் காலை எக்ஸஸைஸ்க்காக ஓடிவந்துகொண்டிருக்கிறா “தான்யா”.. [கெள அண்ணனுக்கு பிடிச்ச பெயரா வச்சேன்:)].. ”பூநாறி மரத்தடி” க்கு வரும்போது.. எங்கிருந்தோ இலங்கை வானொலிப் பாடல் ஒன்று சில்லெனும் காற்றோடு தான்யாவின் காதைத் தழுவியது...
    “வசந்தப் பூங்காற்றே.. கொஞ்சம்ம்ம்ம்ம் உறங்கத் தாலாட்டூஊஊ..
    கனவு மலரும்.. காலை நேரம் .... இதழில் ஓர் பாட்டூஊஊஊஊ..
    திரும்பிப் பார்க்காதேஏஏஏ.. இதயம் ஏற்காதே...”..

    ஆஆஆ பாடல் கேட்டதும் தான்யாவால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.. அப்படியே அருகிலிருந்த அந்த பூங்கா பெஞ் லே இருந்துவிட்டா....... நினைவலைகள் தொடர்ந்தது...

    இப்பூடித்தான் எழுத நினைச்சேன்ன் .. ஆனா முடியல்ல.. என்னால எதுக்கும் ரைம் ஒதுக்க முடியவில்லை.. அதனால இதில் பங்கு கொள்ள முடியல்லியே எனும் கவலையோடு அதிரா .....:)...

    கெள அண்ணன்.. கூனாக் கூனா அவர்களைக் கொஞ்சம் கூட்டி வந்து இந்தக் கதையை எழுதி முடிக்கச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக
      அன்பாலே இணைந்துவந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக....

      /// நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ...
      நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ...
      கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ...

      /// நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.....

      /// வெண்ணிலா வானத்திலே நீயும் நானும்
      மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்...

      /// செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா...
      பொன் வாசம் மேடை போடுதம்மா...(வரிகள் தப்பென நினைக்கிறேன்...)

      /// வசந்தப் பூங்காற்றே... கொஞ்சம்... உறங்கத் தாலாட்டு.... கனவு மலரும் காலை நேரம் ...

      // வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்...

      இந்த வரிகளை திரும்பத் திரும்பக் கேட்கப் பிடிக்கும்....

      ------------------------------------------------------------------------------
      அதிரா - கேஜிஜி சார் சொல்லியிருப்பது, பி.சுசீலா பாட்டைக் கேட்டுத்தான் அந்தப் பெண் (கேஜிஜி சார் ADD பண்ணியிருக்கிறது... இளமையான, அழகான பளிச் என்று இருக்கிற... SO & SO). உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நீங்க நெட்ல பார்த்த இடத்திலெல்லாம் எழுதியிருக்கிற பாடல்கள்ல, ஒண்ணுமே பி.சுசீலா பாடினமாதிரித் தெரியலை, அதுவும் 'வசந்த பூங்காற்றே..' நிச்சயமா இல்லை.

      இனியாவது, 'செந்தாழம் பூ' என்ற அட்டஹாசமான பூவை, 'செந்தாளம் பூ'ன்னு எழுதாதீங்க.

      நீக்கு
    2. அச்சச்சோ நெல்லைத்தமிழன்... நீங்க போட்ட லிஸ்ட்டைப் பார்த்து நான் மயங்கியே விழுந்திட்டேன்ன்ன்:), என் டயரியில் இருப்பதை அப்படியே சொல்லுறாரே ... இவை உங்களுக்கும் பிடிச்ச வசனங்களாக்கும் என:).... அதுசரி எங்கு போய் பொறுக்கினீங்க இவ்ளாத்தையும்? எங்கேயோ மேடை போட்டுச் சொல்லியிருக்கிறேன்போல ஹா ஹா ஹா:)... செந்தாழம்பூ இனி மறக்க மாட்டனே:)

      நீக்கு
    3. நோஓ கெள அண்ணன் சொன்னது, முடிவுதான் சுசீலா குரலில் முடியோணும் என.... ஆரம்பம் எப்படியும் ஆரம்பிக்கலாமெல்லோ... என்னோடது ஆரம்பம் தானே... இப்பாட்டுடன் கனவுலகுக்குள் நுழைந்து.... சுசீ... பாட்டுக்கேட்டதும் திடுக்கிட்டு நோர்மலுக்கு வருவா எப்பூடி என் கற்பனை?:)...

      அதுசரி அந்த பாட்டு தெரியுமோ உங்களுக்கு? தெரிஞ்சால் லிங் தாங்கோ.. என்ன படம்?.. நான் சொன்னது வசந்தப் பூங்காற்றே... வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் ரேடியோவில் கேட்டிருக்கிறேன்... அப்பவே இந்த வரிகள் மட்டும் மனதில் பதிந்து விட்டது...

      நீக்கு
    4. ////பெண் (கேஜிஜி சார் ADD பண்ணியிருக்கிறது... இளமையான, அழகான பளிச் என்று இருக்கிற... SO & SO).///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் X 4532786 ... அஞ்சூஊஊ கொஞ்சம் ஓடிவந்து இதைப் படிங்கோ:)

      நீக்கு
    5. குரோம்பேட்டை குறும்பன்26 ஜூன், 2017 அன்று AM 10:11

      // கெள அண்ணன்.. கூனாக் கூனா அவர்களைக் கொஞ்சம் கூட்டி வந்து இந்தக் கதையை எழுதி முடிக்கச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா:).//

      ஊர்ல இருக்கற இலக்கியவாதிங்க என்னை பாதி மனதோடு அரை எழுத்தாளன் என்று சொல்லலாமா என்று குவார்ட்டர் அடித்து யோசனை பண்ணிக்கிட்டு இருக்கற சமயத்துல உங்களோட கதையை நான் நடுவுல மானே தேனே சேர்த்து எழுதினேன் என்றால் ........ இனிமே நான் ஏதாவது எழுதினால், எல்லோரும் கதை உன்னுதா இல்ல மண்டபத்துல இருக்கறவங்க எழுதிக் கொடுத்ததா என்று துரத்தித் துரத்தி அடிப்பாங்க. அதனால மீ எஸ்கேப்பு!

      நீக்கு
    6. //தான்யா”.. [கெள அண்ணனுக்கு பிடிச்ச பெயரா வச்சேன்:)].. ”//

      மென்மையான கண்டனங்கள் தானைத்தலைவி தான்யா வாசகர்கள்அனைவரின் கனவுக்கன்னி ..கதை எழுதியவரை மறக்கவச்சி மெயின் ஹீரோ ஹீரோயின் ராமனை சீதையை மறக்கவச்சி எல்லார் மனதிலும் நின்ற ஒரே பெயராச்சே தான்யமாலினி :))

      நீக்கு
    7. ஐயோ அதிரா தான்யானு வைச்சு எழுதினீங்கனா ராரா முதல்ல வந்து நிறைய ஓட்டு போட்டு ஜெயிக்க வைச்சுருவார்!!! ராரா ஆரம்பிச்ச தான்யா க்ளப்ல உங்களுக்கும் போஸ்ட் உண்டல்லோ..!!!

      கீதா

      நீக்கு
  8. நெல்லைத்தமிழன் டக்குப்பக்கென படமும் கீறி கதையையும் எழுதிடுங்கோ.. இல்லை எனில் நீங்க கோடு போட.. ஏனையோர் ரோட்டுப் போட்டிட்டீனம் என ச் சொல்லுவீங்க :).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்ன நேரம், நான் செலெக்ட் பண்ணின பாட்டை, கீதா சாம்பசிவம் மேடம் எழுதுறாங்க. ம்ம்ம்... நான் உப்பு விக்கப்போனா மழை வருது, மாவு விக்கப்போனா புயல் வருது.. என்ன செய்ய?

      நீக்கு
    2. என்னமோ சுசீலாம்மா ஒரே ஒரு சிறந்த பாடல்தான் பாடினா மாதிரி நொடிச்சு நொந்து போறீங்களே நெல்லை... பாடலுக்கா பஞ்சம்! இதே பொருளில் என்னை மறந்ததேன், காதல் சிறகைக் காற்றினில் விரித்து பாடல் எல்லாம் கூட இருக்கே...!

      நீக்கு
    3. //படமும் கீறி//

      ஐயோ நகம் பேர்ந்துடப் போகுது..

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீராம் சத்தம் போடாதீங்கோ அவர் கீறத் தொடங்கிட்டார்ர்:) இடையில சத்தம் போட்டால்.. நாங்கதான் தன்னைக் குழப்பிட்டோம் என குற்றச்சாட்டுச் சொல்லிடப்போறார்:).

      நீக்கு
  9. ம்ம்ம்ம்ம்ம், நினைவலைகளை எப்படி எழுத முடியும்? ம்ம்ம்ம்ம்? படமாட்டமா கண்ணெதிரே வருமா? யோசிக்கணும்! :)))) நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா? னு முதல்லே பாடிட்டுஅப்புறமா நெஞ்சம் மறக்கவில்லை! அது நினைவை இழக்கவில்லைனு பாடணுமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இந்தப் பாட்டை வைத்து எழுத ஆரம்பித்தால் - அதுக்குள்ள உங்களை யாரு வந்து இதை எழுதச் சொன்னது? கீதா மேடம்.. எனக்குக் கோபம் வராது. வந்தால், உங்களுக்கு உலக (உலக்கை) நாயகரின் 5 படங்களைத் தொடர்ந்து பார்க்கவேண்டும், அதிலும் "அந்த ஒரு நிமிடம்", "சிம்லா ஸ்பெஷல்" போன்ற படங்களை கூட இரண்டுமுறை பார்க்கவேண்டும் என்று சட்டம் போட்டுடுவேன்.

      நீக்கு
    2. நெ.த. நீங்க சொன்ன இரண்டு படங்களையும் பார்த்துத் தொலைச்சிருக்கேன்! பிள்ளை உபயம்னு நினைக்கிறேன். அவர் கமல் பக்தர்! :)))) அப்புறமா இன்னும் சில பாடல்கள் கூட விபரீதத்துக்கு நினைவில் வருது! சொல்லிடவா? வசதி எப்பூடி?


      "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"க்கு ராயல்டி தனியா அனுப்பி வைக்கவும். :)

      நீக்கு
    3. 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'க்கு ராயல்டி, நீங்க எங்க மனசுல இருக்கறதுதான். வேற கமலோட, படு சொதப்பல் படங்கள் லிஸ்டு கொஞ்சம் சொல்லுங்களேன்.

      நான் மதுரைல படிச்சிட்டிருந்தபோது, அந்த ஒரு நிமிடம் முதல் நாள் 6 மணி ஷோவுக்குப் போய், பாதில நாங்க நண்பர்களெல்லாம் எழுந்து வெளில வரலாம்னா, தியேட்டர் செக்க்யூரிட்டி, ஹாலை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு சொல்லிட்டார். (அப்புறம் படம் பப்படம்னு வெளில உள்ளவங்களுக்குத் தெரிஞ்சுடுமாம். அவர் கவலை அவருக்கு)

      நீக்கு
    4. ஹிஹிஹி, என்னைப் பொறுத்தவரை கமல் படங்கள் எல்லாமே! ஹிஹிஹி! இருந்தாலும் போனாப் போகுதுனு "தெனாலி" (பாட்டுக்காக) மை.ம.கா.ரா. சிரிப்புக்காக! போன்றவை சேர்த்துக்கலாம். " "சிங்கார வேலன்" பார்த்திருக்கீங்களா? நொந்து நூலாயிடுவீங்க! :))))

      நீக்கு
    5. சரி சரி.. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லிடவேண்டியதுதான் கமல், சிம்ரன் காய்ச்சல்ல இருந்தபோது, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்கள்ல சிம்ரன் ஆக்டிங். அப்புறம் குஷ்பு காய்சல் இருந்தபோது சிங்காரவேலன். சி.வே- கவுண்டமணி, வடிவேல் போர்ஷனுக்கே குடுத்த காசு சரியாப்போயிடுச்சு.

      நீக்கு
  10. நண்பர்களே, கதை ரெடி -

    கதையின் பெயர் - ‘ஒருநாளும் உனைமறவாத.....’’

    http://aahavae.blogspot.fr/2017/06/blog-post_26.html#more

    பதிலளிநீக்கு
  11. ஆஹா... நல்லாத்தான் இருக்கு...

    பதிலளிநீக்கு