இதற்கு முந்தைய பகுதிக் கதை :
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.2
பிறகு, தண்டபாணியும் ராதாகிருஷ்ணனும் தங்களின் பால்ய வயது கடலூர் நினைவுகளில் மூழ்கி, நினைவுக் கடலிலிருந்து பல முத்துக்களை எடுத்து ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர்.
கோழிமுட்டைப் பள்ளிக்கூட வாத்தியார்கள் பத்மநாபன், ஸ்ரீனிவாசராகவன் தொடங்கி, பால்கார நடேசன், தேவிவிலாஸ் ஹோட்டல் வழியாக, பாடலீஸ்வரர் கோவில் யாளி சிலையின் வாயில் உருளும் கோலி வரை பேசித் தீர்த்தார்கள்.