சனி, 17 ஜூலை, 2010

ஜூலை 14 வடிவம் :: மீனாக்ஷி.

அன்புள்ள எங்கள் ப்ளாக்,
தங்களின் ஜூலை 14 ஆம் தேதி படைப்பாற்றல் பயிற்சிக்காக நான் வரைந்த படம்.  மாலையும் இரவும் சந்திக்கும் அந்த மயக்கும் பொழுதை நான் வரைய முயன்றதில் வந்த படம் இது.   பதிவிடுவதற்கு மிக்க நன்றி.

அன்புடன்
மீனாக்ஷி.


13 கருத்துகள்:

  1. பிகாசோ மாதிரி... மாடர்ன் ஆர்டா?

    பதிலளிநீக்கு
  2. மாதவனும் பெரிசா வரையறாரு, மீனாட்சியும் பெரிசா வரையறாங்க. ஒரு வேலை இதுதான் கலையின் வளர்ச்சியோ?

    by the way, the drawing is good

    பதிலளிநீக்கு
  3. நன்றி பத்மா!

    நன்றி மாதவன்!

    //மாடர்ன் ஆர்டா?//
    ஏன் அப்பாதுரை, நான் வரைந்த படம் உங்களுக்கு புரியவில்லையா?

    //இதுதான் கலையின் வளர்ச்சியோ?//
    நான் கிறுக்கரதெல்லாம் ஒரு கலையோட சேர்த்தியா நான் நினைக்கறதே இல்லை. நீங்க எழுதி இருக்கறத படிச்சபோது எனக்கு சிரிப்புதான் வந்துது
    பெ. சொ. வி.

    பதிலளிநீக்கு
  4. //by the way, the drawing is good//
    Thanks Po.Se.Vee!

    பதிலளிநீக்கு
  5. படகிலும் / கரையிலும் கூட இருப்பது "பட்லி" போலிருக்கு ? பொண்டாட்டியாய் இருந்தா - ரெண்டு பெரும் சேர்ந்து இருக்க சாத்தியம் இல்லை !!

    பதிலளிநீக்கு
  6. குரோம்பேட்டைக் குறும்பன்18 ஜூலை, 2010 அன்று PM 4:33

    சின்ன வயசுல நான் முடி வெட்டிக்கொண்ட சலூனில் கூட இதே போல ஒரு ஓவியம் இருந்ததுங்க! அதை வரைந்தவரும் நீங்கதானா?

    பதிலளிநீக்கு
  7. //குரோம்பேட்டைக் குறும்பன் said...

    சின்ன வயசுல நான் முடி வெட்டிக்கொண்ட சலூனில் கூட //

    அது எனக்கு தெரியாது, ஆனா முடி வெட்டிவிட்டது நானு ? பைசா குடுக்காம ஓடி போய்டீங்க !! இண்டரெஸ்ட் எல்லாம் போட்டு ஏதும் பார்த்து செய்யுங்க ?

    - சாய்

    பதிலளிநீக்கு
  8. குரோம்பேட்டைக் குறும்பன்18 ஜூலை, 2010 அன்று PM 5:00

    சின்ன வயசுல எனக்கும், என் அண்ணனுக்கும் சேர்த்து முடி வெட்டி விட அந்த சிங்கிள் மேன கடையில் இருந்த கடை அதிபர் பக்கிரி அவர்களுக்கு, நாங்க மொத்தமாக ஒவ்வொரு முறையும் நாலணா கொடுத்துள்ளோம். எனவே, என்னுடைய கட்டணம் இரண்டணாவை அந்தக் காலத்தில் நான் ஒழுங்காக செலுத்திவிட்டேன் என்பதை இதன் மூலம் பதிவு செய்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. //சின்ன வயசுல நான் முடி வெட்டிக்கொண்ட சலூனில் கூட இதே போல ஒரு ஓவியம் இருந்ததுங்க! அதை வரைந்தவரும் நீங்கதானா?//

    சூப்பர்! :)


    //படகிலும் / கரையிலும் கூட இருப்பது "பட்லி" போலிருக்கு ? பொண்டாட்டியாய் இருந்தா - ரெண்டு பெரும் சேர்ந்து இருக்க சாத்தியம் இல்லை !!//

    சரிதான், அது பட்லியும் இல்லை, பெண்டாட்டியும் இல்லை. 'ஒருவர் காதலன், ஒருத்தி காதலி'

    பதிலளிநீக்கு
  10. Thanks Vijay!
    'SPS' உங்க குறும்புத்தனம் சிரிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு