வெள்ளி, 22 ஜனவரி, 2021

படத்திற்கு நாலு வரி !






Srinivasagopalan Madhavan: 

மயில் விளக்கை
......My விளக்காக்க
சுடலா மென்றால்
.....சுடுமோ வெனபயமே !!

Asokan Kuppusamy : 

இருள் அகற்றும் தீபம்
இனிய மயில் தீபம்

Devarajan Shanmugam : 

நிழலுக்கு வெளிச்சமில்லை
நிழல்விளக்கில்
தீபச்சுடரில்லை
இயற்கை வகுத்த நீதி
பொய்யாதிருக்கும்
பொய்யா விளக்கு.

துரை செல்வராஜு: 

அன்னம் கொண்ட வண்ணம்
ஆக வேண்டும் எண்ணம்
மின்னும் சுடர் வண்ணம்
வெற்றி நமது திண்ணம்.

Pradhapan Jayaraman : 

விளக்கில் நெய்போன்ற பொய்த்தோற்றம் தரும் உறைந்த தேங்காயெண்ணெய்.?

வடமதுரை சாணக்கியன்: 

அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்... அதில் ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்.....

(மின்நிலா : இது சினிமா பாடல் ! பாடல் முதல் வரி : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா --- )

Srinivasagopalan Madhavan: 

இதைக் கண்டவுடன், பிரபந்த பாசுரங்கள் நினைவில் வருகிறது..
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.. 

Arun Jawarlal : 

ஒளியில் உண்மை என்றும், பிம்பம் என்றும் உண்டோ என்று குழம்பியது உயிரற்ற அன்னம்! 

ராஜேந்திரன் கந்தசாமி: 

மெய் விளக்கில் பொய் தீபம்.

(மின்நிலா : "இது நல்ல கருத்துரை. ஆம்! இந்தப் படத்தில் ஒரு சிறிய விளக்கை ஒரு CD மீது நிறுத்தி, படம் எடுத்தேன். அதன் பின் விளக்கில் எண்ணெய் /நெய்,  திரி, விளக்கு ஒளி யாவும் paint app மூலம் வரையப்பட்டவை ")


Srinivasagopalan Madhavan : 

நெய்யி லொருபஞ்சை நேர்த்தியாய் ஏற்றிவைத்துப்
பொய்யிருட் டையோட்டிப் பூவுலகில் - உய்யவழி
மெய்வழி யாகிய மேலோர் வழிசென்றுச்
செய்வோ மினிய செயல் !

Venkatesan Srinivasagopalan : 

(நேரிசை வெண்பா)
அன்னம் விளக்கேற்ற அண்டம் ஒளிபெறும்
அன்னம் பிறர்க்களிக்க ஆனந்தம் - எண்ணம்
சிறப்புற எல்லாம் சீராகும் காண்பீர்
அறத்திற்காள் ஆதல் அறிவு. 


3 கருத்துகள்:

  1. அது போலியானது.. இட்டுக் கட்டப்பட்டது என்பது நன்றாகத் தெரிகிறது.. ஆனாலும் -

    கேட்டது படத்துக்கு நாலு வரி என்று தானே!..

    பதிலளிநீக்கு
  2. படத்துக்கு நாலு வரி! கொடுத்தாச்சு!

    பதிலளிநீக்கு
  3. படமும் படத்திற்கான நண்பர்களது வரிகளும் நன்று.

    பதிலளிநீக்கு