செவ்வாய், 1 ஜூன், 2010

ரேவதி நரசிம்ஹன் பாட்டு

அன்புள்ள  எங்கள் ப்ளாக்,
முன்பே பயமுறுத்தினபடி இப்போ ஒரு பாட்டைப் பாடி....:)
அனுப்பி இருக்கிறேன் .
கேட்கும்படி இருந்தால் பதிவிடவும்.
உங்கள்  ஆரோக்கியமான தூண்டுதலுக்கும , சப்போர்ட்டுக்கும்   மிகவும் நன்றிம்மா.
அன்புடன் ,



16 கருத்துகள்:

  1. அழகான பாடல். நல்லா பாடி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அன்பு மீனாக்ஷி,உங்கள் நல்ல உள்ளம் தெரிகிறது.நன்றி. பாடலுக்கு இன்னும் அதிக உணர்ச்சி காட்டி இருக்க வேண்டும். குரல் ஒத்துழைப்பு போதாதம்மா.
    நீங்கள் பாடவில்லையா.!

    பதிலளிநீக்கு
  3. நல்ல பாட்டு
    அழகா பாடியிருகீங்க ரேவதி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வல்லிம்மா,
    எவ்ளோ அருமையா பாடி இருக்கீங்க? நீங்க பேசும்போதே கவனிச்சு இருக்கேன். உங்களுக்கு அப்படி ஒரு இனிமையான குரல்! எங்கம்மா எல்லாம் சொல்லுவாங்க. பாட்டுப்போட்டியில எல்லாம் பங்கெடுத்துக்கும்போது கை தாளமோ கால் தாளமோ போட்டுண்டே தான் பாடணுமாம். அது ஒரு மிக முக்கியமான pre requisiteஆமே! அருமையா சொடுக்கு போட்டுண்டே பாடி இருக்கீங்க. ரொம்ப ரசிச்சு கேட்டேன். சூப்பர். இதுக்கு முன்னாடி இந்த பாட்டை கேட்டதில்லை. இப்போ ரொம்ப பிடிச்சு போயிடுத்து.

    பதிலளிநீக்கு
  5. ஏற்கெனவே கேட்டிருக்கேன் ரேவதி உங்க குரலை. அது பக்திப் பாடல்னு நினைக்கிறேன். இதுவும் நல்லா இருந்தது. ரொம்ப நாளாச்சு இந்தப் பாட்டை வானொலியிலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ கேட்டு. அன்பு மனம் கனிந்து விட்டால் அச்சம் தேவை இல்லை தான். நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  6. அன்பு அநன்யா, குரல் நிறையவே தடுமாறுகிறது. பெண்ணிடம் அனுப்பி அவள் ஓகே சொன்னதும் இங்கே அனுப்பிவிட்டேன்.
    ரொம்பப் பழைய பாட்டு இது.1962 வாக்கில் வந்த படம்.முடிந்தால் லின்க் அனுப்புகிறேன்.நன்றிப்பா.

    பதிலளிநீக்கு
  7. அன்பு பத்மா, பாட்டில் இழையும் அந்யோன்யம் எனக்கு மிகவும் பிடிக்கும் .சுசில்லாவும்,பி.பி.ஸ்ரீநிவாசும் மிகவும் அழகாகப் பாடி இருப்பார்கள். உங்களுக்கும் பிடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்க்கிறது.

    பதிலளிநீக்கு
  8. அன்பு கீதா,நம் நாளையப் பாட்டு இல்லையா. பாட்டும் பொருளும் இசையும் மிகப் பொருத்தமாகவே இருக்கும்.முன்னால் சிலோன் வானொலியில் நிறையவே வரும்.செய்யும் தொழிலே தெய்வம்னு ஒரு படம் வந்தது.அதில்தான் இந்தப் பாட்டுவரும்.ரசித்ததற்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  9. நம்ப வல்லியம்மா பேசினாலே பாட்டு மாதிரிதான் இருக்கும், இதுல பாட்டே பாடினா...:) அருமையான முயற்சி வல்லியம்மா!! soooo shweeeet!!...:))

    பதிலளிநீக்கு
  10. ம்ம்ம்,தக்குடூஊஊஊ. ஓகே. பேசுபவர்கள் எல்லாமே நல்ல பாடகர்களாக இருக்க சாத்தியமா.:)
    இல்லை பாடுபவர்கள் நன்றாகப் பேசுவார்களா.
    சர்ச்சைக்குரிய விசயம்.
    இருந்தாலும் கைதட்டலை விரும்பி ஏற்றுக்கொள்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  11. பாட்டு அருமையா,இனிமையாயிருக்கு வல்லிம்மா.. உங்களுக்கு அந்தக்கால ஜிக்கியின் குரல் எனக்கு தோணுது :-)

    பதிலளிநீக்கு
  12. வல்லிம்மா உங்க பாட்டை நானும் கேட்கும் பாக்கியம் பெற்றேன்... இசையும் நடனமும் என் மூச்சு...

    உங்க பாட்டை கேட்டு ரசித்தேன்... கொஞ்சம் மூச்சு பயிற்சி ரியாஸ் செய்தால் ஆஹா இடையே ஏற்படும் அந்த துளி இடைவெளி விடாமல் தவிர்க்கலாம்பா...

    இடையே தொண்டை செருமலும் கேட்டேன் :) தாளம் போட்டுக்கொண்டே பாடுவதையும் கேட்டேன்....

    எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருந்தது... இன்னமும் நிறைய பஜன் சாங்க்ஸ் உங்க குரலில் கேட்கவும் இஷ்டப்படுகிறேன் வல்லிம்மா...

    உங்க குரலில் கொஞ்சம் கூட பிசிறு இல்லை.... அருமையா இருந்தது தெளிந்த நீரோடையாக உங்க குரல்...

    கம்பீரமும் தெரிந்தது.... மனம் நெகிழவைத்த குரல் வல்லிம்மா...

    இன்னமும் பாடுவீங்களா... கேட்க காத்திருக்கிறேன்....

    அன்பு வாழ்த்துகள் வல்லிம்மா...

    பதிலளிநீக்கு
  13. அன்பு சாரல் மீக மிக நன்றிப்பா. பாடிக் கொண்டே இருந்தால் குரல் வ்வளம் பெற்றிருக்கும். விட்டுவிட்ட்டேன்:)

    பதிலளிநீக்கு
  14. இன்னமும் பாடணுமா மஞ்சுபாஷிணி!!
    இதைவிடா என்ன பாராட்டு வேண்டும்!!உங்க அன்பு ஊள்ளத்தூக்கு ரொம்ப நன்றி.
    உண்மைட்தான் மூச்சூ ஒத்துழ்ஹைஇக்கவில்லை. தைராய்ட் பிரச்சினை கரகரப்பைக் கூட்டிவிடுகிறது.
    பாட மிகவும் ஆசைதான்.
    நீங்கள் சொன்ன மூச்சுப் பயிற்சியைச் செய்து பார்க்கிறேன் அம்மா.
    பஜன் சாங்க்ஸ் ம்ம்ம்ம்ம். திருப்ப்பாவைப் போட்டியில் பரிசு வாங்கின கனாக்காலங்களுக்குப் போக வைத்துவிட்டீர்கள்:)
    அரைப்படித்தேன் குடித்த உத்சாகம் வருகிறது!!!

    பதிலளிநீக்கு
  15. வல்லி அக்கா , அற்புதமாய் பாடி இருக்கிறீர்கள்.
    இனிமையான குரல்.

    பதிலளிநீக்கு